சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆடு நனைக்கிறதே என்று ஓனாய் அழுதது போல் இருக்கிறது ஸ்டாலின் அதிமுக வினரை திமுகவில் இணைய அழைப்பு விடுத்தது. திமுகவில்  கருணாநிதி  மறைவிற்கு பிறகு அதிருப்தி இருக்கிறது. சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளனர்.

அதிமுக ஒரு தேன் கூடு உண்மையான அதிமுக தொண்டன் யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக நிறுத்தர்குறி வைக்கப்பட்டுவிட்டது.ஆட்சியை கலைக்க  பகிரங்க முயர்ச்சியை மேற்கொண்டார்கள் இருந்தாலும் தொண்டர்கள் ஒற்றுமையால் அதிமுக உறுதியாக இருக்கிறது.மேலும் வேலூர் அதிமுக வின் கோட்டை என்றும் தெரிவித்துள்ளார்.