தமிழக அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய துரைமுருகன் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தெலுங்கானா முதல்வர் முதல்ர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆனது. ஆளுங்கட்சி தலைவர்கள் பலர் ஸ்டாலின் காங்கிரஸை கழட்டிவிட்டு, மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என கருத்து விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டுவை திமுகவ பொருளாளர் துரைமுருகன் அவரது மகனுடன் சென்று பார்த்து விட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பு பற்றி அவர் கூறுகையில், அமராவதி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வருகையில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மற்றபடி இது அரசியல் சந்திப்பு கிடையாது என தெரிவித்து உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment