துல்கர் சல்மானின் 25வது படம் என்னதான் ஆனது?! படத்தின் புதிய அப்டேட்!

மலையாள சினி உலகில் முன்னனி இளம் நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் நல்ல நடிகராக உள்ளார்.

இவரின் 25வது படமாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தயாரானது. இந்த படத்தில் ரீது வர்மா ஹீரோயினாகவும், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலிலும் நடித்து இருந்தார். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.

இப்பட ஷூட்டிங் முடித்தும் சில பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் உள்ளது. தற்போது இப்படத்தை வயக்காம் நிறுவனம் வாங்கி விட்டதாம் ஆதலால் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.