கொரோனா கட்டுப்பாடு…! தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் ரத்து…!

தஞ்சையில் பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தற்போது அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி  திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தஞ்சையில் பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெகு விமர்சையாக நடைபெறும், இந்த விழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தற்போது அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால், வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.