போதைப்பொருள் விற்பனை – குண்டர் சட்டம் கைது தவறு இல்லை!

சிறுவர்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு இல்லை என உயர்நீதிமன்றம் கருத்து.

குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறில்லை:

goondasact

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்றவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சிறுவர்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு இல்லை என கூறியுள்ளது.

குண்டர் சட்டம் ரத்து:

hcchennai

இதனைத்தொடர்ந்து, பாளைங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், சுடலைமணி மற்றும் உச்சி மகாகாளி ஆகிய 3 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

போதை பொருள் விற்பனை:

கடந்த ஜூன் மாதம் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு  போதை பொருள் விற்றதாக 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தில் கைதானவர்களுக்கு உரிய தகவலை எழுத்துபூர்வாக வழங்க தாமதம் ஏற்பட்டதால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment