ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகள்! தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்!

 கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகே அச்சத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனை தடுப்பதற்காக இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையும் மீறி விழுப்புரம் மாவட்டத்தில் வெளியே சுற்றிய 4 வாகன ஓட்டிகளை பிடித்த போலீசார், தோப்புக்கரணம் போட வைத்து வித்தியாசமான முறையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.