சென்னையில் தினசரி 9400 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

சென்னையில்  தினமும்  9400 லாரிகள் மூலம், குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்று குடிநீர் வழங்கல் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் செயலாளர் ஹர்மந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.233.72 கோடி நிதியை சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கியுள்ளது.9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 9 எம்.எல்.டி தண்ணீர் கிடைக்கிறது என்று ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.