38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியல் என நிரூபிக்கப்பட்டு விட்டது – வானதி சீனிவாசன்

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் பேட்டி.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதுகுறித்து, வானதி சீனிவாசன் அவர்கள் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பாஜகவில் எந்த ஒரு கடைநிலை தொண்டனும் கூட நாட்டின் உயர்ந்த பதவிக்கு வர இயலும். உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்று கொண்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.