இன்று துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கிறார் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன்…!
இன்று துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கிறார் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன்…!
தெலுங்கானா கவர்னராக பதவி வகிக்கும், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில், புதுவையின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
புதுச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி அவர்கள் தெரிவித்து வந்தார்.
இதனை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கிரண்பேடியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், தெலுங்கானா கவர்னராக பதவி வகிக்கும், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில், புதுவையின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
இவர் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் நிலையில்,புதுவை யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.