தேங்காய் தண்ணீர் தானேனு சாதாரணமா நினைக்காதீங்க…! இதில் உள்ள நன்மையை கேட்டா அசந்து போய்ருவீங்க…!

தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நம்மில் பலருக்கும் உடலில் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. எனவே தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் வைரஸையும் அளிக்கிறது.

தைராயிடு

தைராயிடு பிரச்சனை உள்ளவர்களுக்கு, தேங்காய் தண்ணீர் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால், உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராயிடு சுரப்பிகள் சீராக இயங்கவும் உதவுகிறது.

சிறுநீரக பிரச்னை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை குடித்து வந்தால், சிறுநீரகம் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் உள்ள டாக்சீன்களை வெளியேற்றி, சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.

செரிமானம்

செரிமானம் பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் செரிமான பிரச்னை நீங்குவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து உடல் அஆரோக்கியதையும் மேம்மடுத்துகிறது.

உடல் எடை

உடல் பருமனை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், அடிக்கடி தேங்காய் தண்ணீரை குடிக்கலாம். இதனை குடிப்பதன் மூலம், பசி கட்டுப்படும். இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பதால், கொழுப்பு உடலில் சேராது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.