அதிமுகவை உரசி பார்க்க வேண்டாம்…! எல்.கே.சுதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வைகை செல்வன்…!

ஒருவேளை  எல்.கே.சுதீஷ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்படி பேசியிருக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டில் கூட்டணியில் தேமுதிக இல்லாதிருந்தால், இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றும், கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை பேச்சாளர் வைகை செல்வன் அவர்கள் இதுகுறித்து  கூறுகையில், அதிமுக யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை  எல்.கே.சுதீஷ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்படி பேசியிருக்கலாம். இருந்தாலும், அதிமுகவை உரசி பார்க்கும் செயலில் தேமுதிக ஈடுபட வேண்டாம் என  கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.