முகிலனை நாய் கடித்துள்ளது ! சாப்பிடாமல் பலவீனமாக உள்ளார்-சிபிசிஐடி  போலீசார் விசாரணையில் தகவல்

சுமார் 140 நாட்களுக்கு  பின்னர் காணாமல் போன முகிலன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.ஆந்திர போலீசின் கைவசம் இருந்த அவர் தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து முகிலனை சிபிசிஐடி  போலீசார் சென்னையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் முகிலனை நாய் கடித்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் முகிலனை பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும், சாப்பிடாததால் உடல் பலவீனமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது