நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்.. ஒருவர் கைது!

யூசுப் வீடு அருகே தெரு நாய் ஒன்று அடிக்கடி குரைத்து கொண்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், எரிச்சல் அடைந்த யூசுப் அந்த நாயை அந்த பகுதியில் இருந்து துரத்த முயற்சி செய்தும், அந்த நாய் அந்த பகுதியில் இருந்து செல்லவில்லை. இதையடுத்து யூசுப் வேறு இடத்திற்கு கொண்டு விட முடிவு செய்தார்.

இந்நிலையில், அந்த நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, பின்னர் அந்த கயிற்றை காரின் பின் பகுதியில் கட்டிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். யூசுப்பின் இந்த செயலை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பார்த்தார். முதலில் காரை நாய் துரத்திச் செல்வதாக நினைத்தார், அருகில் சென்று பார்த்தபோது நாயை காரில் கட்டி இருப்பது தெரியவந்தது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். பின்னர், படுகாயங்களுடன் நாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சமூக வலைத்தளங்களில் பரவிய காட்சியை வைத்து போலீசார் யூசுப் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

author avatar
murugan