நாடு முழுவதும் கொரோனாவால் 196 மருத்துவர்கள் உயிரிழப்பு! பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கொரோனாவிற்கு எதிராக முன்களத்தில் நின்று மருத்துவப் பணியாளர்கள்,சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில், பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரையும் காக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .குறிப்பாக அந்த கடிதத்துடன் இந்தியா முழுவதும் மாநில வாரியாக இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை இணைத்துள்ளனர்.அந்த அறிக்கையில்,நாடு முழுவதும், 196 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலே அதிகபட்சமாக தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.