தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், மருத்துவர் ஒருவர் அவரின் உடலை டிராக்டரில் எடுத்து சென்றார்.
தெலுங்கானா மாநிலம், தெனுகுவாடாவைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதன்காரணமாக, அவரின் உடலை அடக்கத்திற்கு எடுத்து செல்வதற்காக ஒரு டிராக்டர் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரியது.
டிராக்டரை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நகராட்சி ஊழியர், டிராக்டரை தனிமை வார்டுக்கு அருகில் நிறுத்தி, உடலை எடுக்க மறுத்து, அங்கிருந்து வெளியேறினார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் யாரும் டிராக்டரை ஓட்ட முன்வராத காரணத்தில், அங்குள்ள மருத்துவர் ஸ்ரீராம், பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து, அந்த டிராக்டரில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு சென்றார்.
அந்த நபரின் இறுதி சடங்குகள் முடியும் வரை, மருத்துவர் அங்கேயே காத்திருந்தார். மருத்துவரின் இந்த செயலுக்கு மக்கள் பலரும் அவரை பாராட்டினார்கள். மேலும் அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…