பக்கா ஆக்சன் கதையில் ஆர்யா.! இயக்குனர் யார் தெரியுமா.?

பக்கா ஆக்சன் கதையில் ஆர்யா.! இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் ஆர்யா அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஓடிடி இணையத்தளமான ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியான திரைப்படம் டெடி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்றது.

இதனையடுத்து தற்போது ஆர்யா நடிகர் விஷாலுடன் எனிமி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது நடிகர் ஆர்யா அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். அது டெடி படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம். இது டெடி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube