தனுஷ் நடிக்கவுள்ள D44 திரைப்படத்தில் நடிகர் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது 44 (D44) வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, D44 திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹன்ஷிகா, நித்தியா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகிய மூன்று பேரும் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகை ஹன்ஷிகா தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…