வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்.

நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அருவா, மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அருவா படத்தில் அடுத்ததாக நடிக்க வாய்ப்பில்லை ஏனெனில் இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கி வருவதால் அடுத்த ஆண்டு அருவா படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 40 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பை 3 மாதங்களிற்குள் முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன் படி செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் தற்போது சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.