குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா….?

குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் நோய்களில் வயிற்று வலி முக்கியமானது. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், பேசும் திறன் படைத்த குழந்தைகளுக்கும் இந்நோய் சர்வசாதாரணமாக வரலாம்.

வயிற்றுவலிக்கான காரணம் :

இந்த வயிறு வலி ஏற்பட காரணம் என்னவென்றால், வயிற்றில் உண்டாகும் ஒருவகை அமிலப் பொருள் குடலின் உட்புறத்தில் உள்ள மெல்லிய சவ்வில் எரிச்சலூட்டுவதால் வயிற்று வலி ஏற்படுகிறது. சீரணக் குறைபாடுகளினால் குடலில் வாயுக்கள் அதிகமாக உற்பத்தியாவதால் வயிற்று வலி உண்டாகும். இதுதவிர வேறு ஏதாவது காரணத்தால் வயிற்றில் பாலை சீரணிக்க முடியாத நிலையிலும் வயிற்றுவலி உண்டாகும்.

டர்பன்டைன் ஆயில் :

Image result for குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால்

 

வயிற்று வழியால் துடிக்கும் குழந்தைகளை உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும். அதற்குமுன் குழந்தையினுடைய வயிற்றின் மீது டர்பன்டைன் எண்ணெயை லேசாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

உணவு கொடுக்க கூடாது :

Image result for குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால்

வலி குறைந்து குழந்தை நிம்மதியாக தூங்கும். மருத்துவரை பார்ப்பதற்கு தாமதமாகும் என்றால் ஒரு தேக்கரண்டி அளவு மில்க் ஆப் மெக்றீசியாவை நீரில் கலந்து புகட்டலாம். வயிற்று வலியினால் அவதிப்பட்ட குழந்தைக்கு சில மணி நேரம் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை :

Related image

இத்தகைய குழந்தைகளுக்கு கிளிசரீனுடன் தண்ணீர் கலந்து எனிமா கொடுக்கலாம். அதனால் வாயுவும், மலமும் கழிந்து குழந்தைக்கு வயிற்று வலி குறையும். ஆனால் எக்காரணம் கொண்டும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பேதிக்கு மட்டும் மருந்து கொடுக்க கூடாது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment