மாநாடு திரைப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா… என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

மாநாடு திரைப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா… என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

மாநாடு திரைப்படத்தின்கதை இந்தி சினிமாவில் இதுவரை வந்ததில்லை அப்படி ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார். 

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம் ஜி, கருணாகரன், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டனர். அந்த டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாநாடு படம் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

இதில் எஸ்.ஜே சூர்யா கூறியது, “இந்த படத்தில் நான் வில்லனாக நடித்து இருக்கிறேன். மாநாடு திரைப்படத்தின்கதை இந்தி சினிமாவில் இதுவரை வந்ததில்லை அப்படி ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும். கண்டிப்பாக இந்த திரைப்படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.”

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube