கண் கலங்கிய கேஜிஎப் வில்லன் அதீரா.! காரணம் என்ன தெரியுமா.?

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2-படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறவேண்டும்.

பிரபல பாலிவுட் நடிகரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் 4-ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.

இதனையடுத்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் பல மணிநேரம் கதறி அழுத்ததாகவும், பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது ”  எனக்கு கேன்சர் இருப்பதாக மருத்துவர்கள் என்னிடம்  கூறியவுடன் நான் அதிலிருந்து மீண்டு விடுவேன் என அவர்களிடம் சொன்னேன். ஆனா இந்த செய்தி எனக்கு தெரிய வந்ததும் என் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து 3 மணி நேரம் அழுதேன். அவர்களுடைய வாழ்கை என்ன ஆகிவிடுமோ பயந்துவிட்டேன்.

ஆனால் அதையே நினைத்து கொண்டு அப்படியே இருக்கவில்லை. இதிலிருந்து மீண்டு விடவேண்டும் என்ற யோசனை மட்டும் என்னிடம் இருந்தது. என்ன நடந்தாலும் பாசிட்டிவாக யோசித்தேன். என்னுடைய குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக குணமடைந்த என்னுடைய உடலை தான் பரிசாக அளித்தேன் நான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன்” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.