பொது இடங்களில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மக்கள் தொகை அதிகம் என்பதால் காற்று மாசு அதிக அளவில் காணப்படும் என்பது நாம் அறிந்ததுதான். கொரோனா வைரஸின் தாக்கமும் அங்கு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அங்கு காற்று மாசும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே டெல்லியில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த ஒழுங்குமுறை 2020 என்ற தொற்றுநோய் மேலான் திருத்தத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளார்.
அதன்படி தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் பொது இடங்களில் வைத்து பான்மசாலா குட்கா ஆகியவற்றை உட்கொள்வோர் மீதும் அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் 2000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…
Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும்…
Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…