உங்களிடம் பான் கார்டு உள்ளதா…? அப்ப கண்டிப்பா இதை செய்யுங்கள்…! இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்…!

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஆதார்  கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக  மாறியுள்ளது. நாம் பயன்படுத்தக் கூடிய வங்கி கணக்கு மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது நாம் பயன்படுத்தும் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை   இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என அறிவித்துள்ளது. அப்படி இணைக்கவில்லை என்றால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்  என்றும், அதன் பின் பான் அட்டை செயல்படாது என்றும், இந்த இணைப்பு தேதி நீடிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.