உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டுமா ? கமல் ஹாசன்

உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டுமா ? கமல் ஹாசன்

ஜூன் மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாதிப்படைந்தனர்.பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மக்களுக்காக, மக்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube