சித்து தவறானவள் என்று சொல்லி மகனை காப்பாற்ற நினைக்காதீர்கள் – ஹேமந்த்தின் தந்தை!

சித்து தவறானவள் என்று சொல்லி மகனை காப்பாற்ற நினைக்காதீர்கள் – ஹேமந்த்தின் தந்தை!

சித்ராவை தவறான பெண்ணாக காண்பித்து உங்கள் மகனை காப்பாற்ற முயற்சிக்காதீர்கள் என ஹேமந்த்தின் தந்தையிடம் அவரது நண்பர் ரோஹித் தைரியமாக பேசியுள்ளார். 

பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாகிய விஜே சித்ரா அவர்கள் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்த ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தவறான வார்த்தைகள் அவர் உபயோகப்படுத்தியது தான் சித்ராவின் இறப்புக்கு காரணம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், சித்ராவுக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் தனது மகனுக்கும் சித்ராவின் இறப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் ஹேமந்த்தின் தந்தை கூறியிருந்தார். அப்படியானால் சித்ரா போதை பழக்கம் கொண்டவரா என பலரும் பேச துவங்கினர். இந்நிலையில், தற்பொழுது சித்ரா ஹேமந்த் இருவரது உறவையும் குறித்து நன்கு அறிந்த ஹேமந்த்தின் நண்பர் ரோஹித் என்பவர் உண்மைகள் அனைத்தையும் வெளியில் சொல்ல துவங்கியுள்ளார். ஹேமந்த்தின் சித்ரவதை தான் இந்த இழப்புக்கு காரணம் எனவும் அவர் கூறியிருந்த நிலையில் ரோஹித் ஹேமந்த்தின் தந்தையுடன் பேசிய ஆடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகியுள்ளது.

அதில் பேசிய ரோஹித் உங்கள் மகன் எப்படியும் பெயிலில் வெளியில் வந்து விடுவான் ஆனால், அதற்காக சித்ராவை பற்றி வெளியில் தவறாக பேசாதீர்கள் இனியும் நான் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். ஏனென்றால் உங்கள் மகன் எப்படிப்பட்டவன் என்பது உங்களை விட எனக்கு நன்றாகவே தெரியும். பண விஷயத்தில் அவனை காப்பாற்ற நினைத்தீர்கள் நாங்களும் அதை அறிவோம் ஆனால், இப்போது ஒரு பெண்ணின் உயிரே போய் விட்டது. இனியும் அவனை காப்பாற்ற நினைத்து சித்ராவை தவறாக பேசாதீர்கள் என ரோஹித் பேசியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube