எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம்-அதிமுக தலைமை அறிவிப்பு

எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம்-அதிமுக தலைமை அறிவிப்பு

இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பு முடிவடைந்தது.
இந்நிலையில் அதிமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மீறி கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தி தொடர்பாளர்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube