இன்று நடைபெறுகிறது திமுகவின் முப்பெரும் விழா…!

திமுக சார்பில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது. 

ஒவ்வொரு வருடமும் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி அளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்கி நடத்துகிறார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.