வேலூரில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது-துரைமுருகன்

வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல்  ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். நேற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  வேலூரில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பினால், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டியது வரும் என்று தெரிவித்தார்.