தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசை கண்டித்து, திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகம் முழுவதும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், பொதுத்துறை நிறுவனங்கள்  விற்பனை,விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ, அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின், அறிவாலயத்தில் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் சிஐடி இல்லத்தில் கனிமொழி ஆகியோர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம், சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம், சென்னையில் கே.பழகிருஷன்னா தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஓசூர் அருகே மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.