சற்று நேரத்தில்…திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு – தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

நாமக்கல் மாவட்டத்தில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.“உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில்,காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும்,திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,டிஆர்பாலு உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.இதனிடையே,முதல்வரின் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,டிரோன் கேமராக்கள் மூலமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

Leave a Comment