திமுக முப்பெரும் விழா: ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது என்று உரையாற்றியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்  நடைபெறுகிறது.

இதன் காரணமாக அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. இந்த முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர்ந்திட நாம் பணியாற்ற வேண்டும். இது குறித்து தொண்டர்களிடம், உள்ளாட்சி தேர்தலில் நாம் 100க்கு 100% வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியில் கொரோனா வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிப்பதற்காக 200 குழுக்கள் அமைக்கப்படவுள்ளது.

கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது காவல்துறையினருடன் இணைத்து 200 குழுக்களும் நடவடிக்கை எடுக்க செயல்படும்.  மாநகராட்சி சார்பில் 5 பேர், போலீசார் ஒருவர் என வார்டிற்கு ஒரு குழு அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் இனி விடியல் பிறக்கப்போகிறது. மாதந்தோறும், சட்டப்பேரவையில் நான் அறிவித்த ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்வேன். திமுகவிற்கு வாக்களிக்காத நபர்கள் கூட நாம் வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Recent Posts

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

18 mins ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

28 mins ago

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…

47 mins ago

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

1 hour ago

ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!

Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…

1 hour ago

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

2 hours ago