வழக்கை ரத்து செய்ய திமுக எம்.பி.க்கள் உயர்நீதிமன்றத்தில் மனு.!

திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்