பாமக தலைவர் போட்ட டுவிட்டுக்கு ”எவ்வளவோ பண்ணீட்டோம் இத பண்ண மாட்டோமா” என்று திமுக எம்பி பதிலடி…

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை  காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல்,  சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

Maalaimalar News: Ramadoss request public must cooperate to ...

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் ராமதாஸ் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், “தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்துத் தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் பதிவு செய்துள்ளார். அதில், “உங்களால் முடியும் ஐயா உங்களால் முடியும். எவ்வளவோ பண்ணிட்டோம், இது பண்ண மாட்டோமா. சரி தானே ஐயா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரு டுவிட்டுகளும் சமுக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

author avatar
Kaliraj