உளவுத் துறையினர், தில்லியில் தன் அறையில் புகுந்து மிரட்டியதாக மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், இதுகுறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவு.
வேலுார் தொகுதி, திராவிட முன்னேற்ற கழக – நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை உளவுத்துறையினர் அவரது அறையில் புகுந்து மிரட்டியது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், ‘இது மிகவும் சீரியஸான விஷயம்… உடனடியாக இதை தில்லி காவல்துறையினர் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என, தில்லி காவல்துறையினருக்கு உத்தர விட்டார். இது தொடர்பாக டில்லி காவல்துறையினர், தமிழ்நாடு இல்லத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கதிர் ஆனந்தின் உதவியாளர், சிலரை, தமிழக இல்ல வாயிலில் இருந்து அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. தமிழ்நாடு இல்ல அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.’தமிழ்நாடு இல்லத்தில் யாரும் தன்னிச்சையாக நுழைந்துவிட முடியாது. வாயிலில் பாதுகாப்பு சோதனை நடக்கும். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாடியிலும் சோதனை நடத்தப்படும்’ என, பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை விபரங்களை சபாநாயகருக்கு காவல்துறையினர் சமர்ப்பித்துவிட்டனர். உளவுத் துறையும், ‘எங்களுக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாம். மக்களவை தேர்தலின் போது, கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின் நடந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவத்துக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் சம்பந்தம் இருக்குமா என, தில்லி காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். மற்றொரு பக்கம், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்போவதாக, கட்சியின் மூத்த எம்.பி.,க்களிடம், கதிர் ஆனந்த் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…