வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி அமைக்கப்படுகிறது என்று துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திராவிட முன்னேற்ற கழக  உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திராவிட முன்னேற்ற கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திராவிட முன்னேற்ற கழக சட்டதிட்ட விதி 31 – பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.

அணிச் செயலாளர்: டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ

இணைச் செயலாளர்கள்: செந்தில்குமார், எம்.பி., புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.