தமிழ்நாடு முழுவதும் மே 7,8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையுவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 7,8, மற்றும் 9 ஆகிய மூன்று நாட்களில் திராவிட அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் அரசின், மக்களுக்கு வளம் சேர்த்திடும் பல திட்டங்களையும், கழக சாதனைகளையும் விளக்கும் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் எனவும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிக்கை வே;வெளியிட்டுள்ளது.
