பெண் தற்கொலை வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது!

பெண் தற்கொலை வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி தேவேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திமுக நிர்வாகி உட்பட ஒருவருக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. இந்த வழக்கில் ஒருவர் போலீசாரிடம் சரணடைந்தார்.

இதில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியான தேவேந்திரனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தேவேந்திரனை கைது செய்தனர்.

அவரை திமுக-விலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது, கூறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube