தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் திமுக சார்பில் நிதியுதவி

அரியலூர் மாவட்டத்தில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்துள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தநிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுக  இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் அருகே நீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உயிரிழந்த மாணவன் விக்னேஷின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும்  திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.