திமுக கவுன்சிலரின் தந்தை மர்ம நபர்களால் அடித்துக் கொலை!

திமுக கவுன்சிலரின் தந்தை மர்ம நபர்களால் அடித்துக் கொலை!

கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை மர்மநபர்களால் அடித்துக் கொலை.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 3-ஆவது திமுக கவுன்சிலர் அத்திஜா பீவியின் தந்தை முகமது ரசாக், பாபநாசம் அருகே மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube