வேலூர் மக்களவை தேர்தல் களம்! திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் அதிகளவு பணப்பட்டுவாடா நடையப்பெற்றதாக கூறி, அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் சமீபத்தில் வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என வெளியானது.

இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தலிலும் இவர்தான் வேட்பாராக திமுக சார்பில் போட்டியிட இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.