சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் – திமுக வேட்பாளர் பரந்தாமன்

சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் – திமுக வேட்பாளர் பரந்தாமன்

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடு இல்லாமல், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும்.

எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், புரசைவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காவலர் குடியிருப்பு உட்பட பல்வேறு இடங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, எழும்பூர் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக வர வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மிகப்பெரிய அலை வீசுவதை என்னால் பார்க்க முடிகிறது. எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடு இல்லாமல், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும் என்பது தான் எனது முக்கியமான கனவு திட்டம் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube