திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது!! மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் !!கமல்ஹாசன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று மக்கள் நீதி  மய்யம் தலைவர்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

Image result for kamal haasan party

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.

இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.மேலும் நேரடியாகவும் களத்தில் இறங்கியும் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் கோவையில் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி  மய்யம் தலைவர்  கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. எங்கள் கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.அதேபோல் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று மக்கள் நீதி  மய்யம் தலைவர்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment