விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்..!

விம்பிள்டன் டென்னிஸ்போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்.

லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் ரிஜ்தோவெனுடன் மோதினார். 

ஜோகோவிச் 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பின் மற்றோரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதி, 6-1, 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில், ஜோகோவிச், சின்னரை எதிர்கொள்ள உள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment