#Breaking:மேசை உடைப்பு:10 அரசு பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்-மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

#Breaking:மேசை உடைப்பு:10 அரசு பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்-மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில்,மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,பெற்றோருடன் வந்த மாணவர்களுடன் இனி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும்,மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Join our channel google news Youtube