மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்கின்றன.

மருத்துவ பரிசோதனை :

Image result for அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

இந்நிலையில் ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காளைகளுக்கான மருத்துவப்பரிசோதனை முகாம் நடைபெற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ சான்று காளைகளின் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள அலங்காநல்லூரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment