இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான “போயிங் 737” மாடல், SJ182 என்று அழைக்கப்படும் விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம், 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஜாவா கடற்பரப்பில் விழுந்ததாக சந்தேக்கம் எழுந்ததை தொடர்ந்து தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, ஜாவா கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்று மீனவர்கள், கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை கண்டெத்துள்ளனர். இதையடுத்து அந்த பாகங்கள், மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், பயணம் செய்தவர்களின் நிலை குறித்து தற்பொழுதுவரை எந்தொரு தகவல்களும் வெளிவரவில்லை.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜோனோ தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கருப்பு பெட்டிகளை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று இராணுவத் தலைவர் ஹாடி தஜ்ஜான்டோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…