ஆமைகள் பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக நினைத்த கலபகோஸ் ஆமை தற்போது பெர்னாண்டினாவின் கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பற்றி சுற்றுசூழல் அமைச்சர் குஸ்டாவோ மரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த காலபோஸ் ஆமை 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அது உயிரோடு இருப்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் இந்த செலோனாய்டிஸ் பாண்டஸ்டிகஸ் ஆமை கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸ் மேற்கொண்ட பயணத்தின் போது இந்த குறிப்பிட்ட வகை ஆமையை கண்டுபிடித்தனர். அதன் பிறகு, இந்த ஆமையின் டிஎன்ஏ வை பரிசோதித்து ஒப்பிட்டு பார்த்ததில் இது 1906 ஆம் ஆண்டு இருந்தவற்றுடன் ஒத்திருக்கிறது. இந்த ஆமை செலோனாய்டிஸ் பாண்டஸ்டிகஸ் இனத்தை சேர்ந்தது என்றும், இது பெரிய வகை ஆமைகளின் வகையை சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இது கலபகோஸ் தீவுக்கூட்டத்தை பூர்வீகமாக கொண்டது.
அதனை தொடர்ந்து சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலபகோஸ் தேசிய பூங்காவின் இயக்குனர் டேனி ரூடா, இந்த ஆமையின் கண்டுபிடிப்பு எங்களுக்கு இந்த இனத்தை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது. அதை போல லோன்சம் ஜார்ஜ் இனம் மற்ற இன பெண் ஆமையுடன் இணைய மறுத்து 2012 ஆம் ஆண்டு அழிந்துவிட்டது. இந்த நிலைமை கலபகோஸ் ஆமைக்கு வரக்கூடாது என்பதை குறித்தும் தெரிவித்தார்.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…