பொய்யான செய்தியால் மன உளைச்சலுக்கு ஆளானோம்.! பிடிவாரண்ட் விவகாரம் குறித்து இயக்குனர் ஷங்கர்.!

நீதிமன்றம் தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக வெளியான செய்தி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.சமீபத்தில் எந்திரன் பட விவகாரத்தில் ஷங்கர் பத்து ஆண்டு காலமாக ஆஜராக காரணத்தால் எழும்பூர் நீதிமன்றம் இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்து அறிக்கை ஒன்றை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.அதில் எழும்பூர்‌ நீதிமன்றம்‌ எனக்கு எதிராக பிடி வாரண்ட்‌ பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப்‌ பார்த்து நான்‌ அதிர்ச்‌சியடைந்தேன்‌. எனது வழக்கறிஞர்‌ திரு.சாய்‌ குமரன்‌, நீதமன்றத்தை இன்று அணுகி இந்தச்‌ செய்தி குறித்து அவர்களின்‌ கவனத்துக்கு கொண்டு சென்றார்‌. எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும்‌ பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்‌.

இணையத்தில்‌ தினசரி நீதிமன்ற வழக்குகளின்‌ நிகழ்வுகள்‌ பதிவேற்றுதலில்‌ நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல்‌ இப்படி ஒரு பொய்யான செய்‌தி உலவுவதைப்‌ பார்க்க ஆச்சரியமாக இருக்கறது. ‘இந்த விஷயம்‌ எனது குடும்பத்துக்கும்‌, நல விரும்பிகளுக்கும்‌ தேவையில்லாத மன உளைச்சலைத்‌ தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள்‌ இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும்‌ பகிரவேண்டும்‌ என்று தயவுகூர்ந்து அன்‌போடு கேட்டுக்கொள்கிறேன்‌ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.