நெஞ்சம் பதைபதைக்கிறது – இயக்குநர் சேரன் ட்வீட்..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
இதை ஆழ்துளை கிணற்றில்  இருந்து சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு படையினர் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாக்கி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஸ் டேக்கில் ட்விட் செய்து  வருகின்றனர்.


இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “7மணி நேரமாக மீட்புபணி தொடர்கிறது.. நெஞ்சம் பதபதைக்கிறது.. விரைவில் மீட்கப்படவேண்டும் இறைவா..” என பதிவிட்டு உள்ளார்.இதற்கு முன் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “மீண்டு வா சுஜித்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan