மாறி மாறி முடிவெடுக்கும் தினகரன் அணி …!மேல்முறையீடு செய்யவா …!வேண்டாமா …!குழப்பத்தில் தினகரன்

18 பேர் விவகாரத்தில் தினகரன் அணி தெளிவான குழப்பத்தில் இருந்து வருகிறது.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
Image result for கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு
 
இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்  18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
Image result for கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு
பின்னர்  மதுரையில் தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில், மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்தனர் .ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.18 பேரின் நலனும், கட்சியின் நலனும், மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே ஆகும்.  தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அதேபோல்  எதிர்க்கட்சியினர் பலரும் மேல்முறையீடு செய்யாமல் 18 பெரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தினகரன் அணியை பொருத்தவரை தெளிவான குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது.காரணம் என்னவென்றால் 18 பேருடன் ஆலோசனைக்கு பின்னர் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர.ஆனால்  நேற்று தினகரன் கூறுகையில் ,மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்தனர் .ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது தினகரன் அணியினர் இன்று வரை கூட சரியான முடிவு எடுக்காமல் திணறி வருகின்றனர்.குறிப்பாக 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு பெரிய அடியாகவே கருதப்படுகிறது.
 
 

Leave a Comment